தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வுநாமக்கல் மாவட்டம் முழுமையும் விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் எழுத்து தேர்வு
Tiruchengode King 24x7 |9 Nov 2025 4:45 PM ISTதமிழ்நாடு அரசின் சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர்கள் 2833 பேர் இரண்டாம் நிலை ஜெயிலர்கள் 180 பேர், ஃபயர் மேன் 631பேர் என 3644 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது
தமிழ்நாடு அரசின் சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர்கள் 2833 பேர் இரண்டாம் நிலை ஜெயிலர்கள் 180 பேர், ஃபயர் மேன் 631பேர் என 3644 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் எழுத்து தேர்வு நடைபெற்றது நாமக்கல் மாவட்டத்தில் 3146 பேர் விண்ணப்பித்திருந்தனர் இதில் ஆண்கள் 2606 பேர் பெண்கள் 540 பேர் என விண்ணப்பித்திருந்தனர்.காலை ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 7:30 மணி முதல் மாணவ மாணவிகள் வரத் தொடங்கினர். நீண்ட வரிசையில் நின்று முழுமையான பரிசோதனைக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலதாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.காலை 10:00 மணி முதல்12 30 மணி வரை எழுத்து தேர்வு நடைபெற்றது.தேர்வு அறையை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப் படவில்லை. மொத்தமாக: 3146 பேர் விண்ணப்பிதிருந்தனர் அதில் ஆண்கள்-2606 பேர் பெண்கள் -540 பேர் ஆவார்கள் இதில் மொத்தம்: 2696 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள் இதில் ஆண்கள்-2245 பேர் பெண்கள் -451 பேர் ஆவார்கள் தேர்வு எழுத வராதவர்கள் - 450 பேர் இதில் ஆண்கள்- 361 பெண்கள் -89 பேர் ஆவார்கள். இதில் நாமக்கல் செல்லப்பன் காலனி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி திவ்யா தனது நாலு மாத பெண் குழந்தையுடன் தேர்வு எழுத வந்துஇருந்தவர் தேர்வு எழுதும் நேரம் நெருங்கியவுடன் தனதுசின்னம்மாவிடம் தனது குழந்தையை ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையுடன் திவ்யாவின் சின்னம்மா மரத்து நிழலில்குழந்தையை படுக்க வைத்து காத்திருந்தார். தேர்வு எழுத வந்தவர்கள் அணிந்திருந்த பெல்ட்,கைகுட்டை,மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் வெளியேயே வைத்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.அதன்படி ஒவ்வொருவரும் தங்களது பெல்ட் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத பொருள்களை சுவற்றின் மேல் பகுதியில் வைத்திருந்தனர் மேலும் பைகளை ஒரு மரத்து நிழலில் வைத்துச் சென்றிருந்தனர்.
Next Story


