கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலி

X
Komarapalayam King 24x7 |11 Nov 2025 6:35 PM ISTகுமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலியானார்.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் மாதேஷ், ,45. கூலி. இவர் நேற்று காலை 09:30 மணியளவில் வீட்டில் குச்சி கிழங்கை கத்தியால் சீவிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை ஆட்டோ மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். நேரம் சரியில்லை என, 9 மாதமாக மனைவி தன் மகன்களுடன் கணவரின் வீட்டு அருகில் தனி வீட்டில் வசித்து வருகின்றனர். மாதேஷ் தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
Next Story
