குருசாமிபாளையம் அமிர்தம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு அன்னதானம்...

குருசாமிபாளையம் அமிர்தம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு அன்னதானம்...
X
குருசாமிபாளையம் அமிர்தம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு அன்னதானம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் சேலம் சாலை பகுதியில் உள்ள சாமுவேல் டிரஸ்ட் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்து அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு அமிர்தம் அறக்கட்டளை தலைவர் கே. பரமசிவம், அவர்கள் தலைமையில் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் செயலாளர் பி. நந்தகுமார், பொருளாளர் கே. கவிதா, உறுப்பினர்கள் கே.முகேஷ், பி. கமலம், உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story