பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து சிறப்பித்த எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி இந்திரா நகர் கல்கி மகளிர் சுய உதவி குழு புதிய பகுதிநேர நியாய விலைக் கடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தலைமை ஏற்று இன்று நாமக்கல் மாநகராட்சி இந்திரா நகர் கல்கி மகளிர் சுய உதவிக் குழு புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ் குமார் திறந்து வைத்து சிறப்பித்தார் மேலும் பொது மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற பொருட்களை வழங்கினார் மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் உரையாற்றினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ இராமலிங்கம் உடன் இருந்தார் மற்றும் இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி மேயர் து. கலாநிதி துணை மேயர் செ. பூபதி கூட்டுறவாளர் ராணா ஆர் ஆனந்த் மாநகராட்சி கொறடா மாமன்ற உறுப்பினர் அ‌‌. சிவக்குமார் மற்றும் கூட்டுறவாளர் இந்திராநகர் எஸ். கணேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story