எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் பணியை ஆய்வு செய்த ஆணையர்

X
Komarapalayam King 24x7 |23 Nov 2025 7:25 PM ISTகுமாரபாளையத்தில் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் பணியினை நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
குமாரபாளையத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தனவா? என்பதை கேட்டு, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்றும், முடியாதவர்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்தும் உதவி வந்தனர். கடந்த இரு நாட்களாக நடக்கும் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாமில் நகராட்சி ஆணையர் ரமேஷ் அனைத்து வார்டுகளுக்கும் நேரில் வந்து, பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, விடியல் பிரகாஷ், தீனா, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story
