சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
X
ஆரணி சைதாப்பேட்டையில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம்.
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மலை மத்திய மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரிபாபு தலைமை தாங்கினார். 41வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சைதாப்பேட்டை வீதியில் வீதி வீதியாக நடந்து சென்று காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஆரணி நகரசெயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்டஇணை செயலாளர் வனிதாசதீஷ், ஒன்றியசெயலாளர் வீரபத்திரன், விவசாயஅணி மாநில துணைசெயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் நகரமன்ற உறுப்பினர்கள் நடராஜன், எஸ்.கே.வி.வெங்கடேசன், சுதாகுமார், பாரதிராஜா, விநாயகம், நிர்வாகி மில் சரவணன் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story