ராமநாதபுரம் பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு மானியம் வழங்கும் விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |30 Nov 2025 5:17 PM ISTதமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் பெண் ஓட்டுநர் களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ₹1,00,000 ரூபாய் மானியத்தில் ஆட்டோ ரிக்ஷா வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் வளர்ச்சி கீழ்துறை மஹாலில் அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கான நலவாரியத்தில் சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்தும், ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை பெற்றுதருவதற்கும் சிறப்பு நல வாரிய பதிவு முகாம் நடை பெற்றது. இம் முகாமில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ₹1,00,000 மானியத்தில் ஆட்டோ ரிக்ஷா பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இம் முகாமில் 100 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலசங்க மாவட்ட தலைவர் முனியசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹிம் முன்னிலையில் மாநில தலைவர் ச.பிச்சாண்டி கலந்து கொண்டு பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மழையும் பொருட்படுத்தாது பெருமளவில் கலந்து கொண்டனர்.
Next Story


