தீபத்திருநாளையொட்டி ஏற்றப்பட்ட ஜோதி
Komarapalayam King 24x7 |3 Dec 2025 9:13 PM ISTகுமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஜோதி ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, குமாரபாளையம் நகரில் உள்ள திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். சிவாய நமஹா, என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கத்தேரி சமத்துவபுரம் அருகே உள்ள சிவபுரம் சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கும், இராமலிங்க சௌடேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவில் நிர்வாகிகள் சிவ வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக செட்று காவிரி கரையோரம் சொக்கப்பனை எரித்தனர். அதன்பின், கோவிலில் உள்ள கோபுரம் அருகே ஜோதி தீபம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று சிவாய நமஹா, என்று கோஷமிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story




