சங்கரன்கோவிலில் காங்கிரஸ் கருத்து கேட்பு கூட்டம்

X
Tenkasi King 24x7 |4 Dec 2025 2:20 PM ISTசங்கரன்கோவில் காங்கிரஸ் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வட்டாரம், சங்கரன்கோவில் நகராட்சி, குருவிகுளம் வட்டாரம், மேலநீலிதநல்லூர் வட்டாரம் ஆகியவற்றை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார், மேலிட பார்வையாளர் லக்கி தலைமையிலான, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், தமிழ்நாடு பார்வையாளருமான .ரூபி மனோகரன் உள்ளிட்ட குழுவினர் கருத்துகள் கேட்டனர்.
Next Story
