நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.க.சரவணன்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 528 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன் அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பில் தொழில்முறை டாக்சி வாகனத்திற்கான மானியத்தினை வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஏ.கே.சுரேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story