மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
X
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் ராமர் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு. மனோஜ் குமார் அவர்கள் வழக்கின் குற்றவாளியான முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ராமர் (31) என்பதற்கு 10.12.2025 இன்று ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story