விஜய்யின் பேச்சு குறித்து அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்

X
Thanjavur King 24x7 |10 Dec 2025 7:29 PM ISTதஞ்சாவூர் மாவட்டம் நடுவூரில், ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, 170.22 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.
தஞ்சாவூர்,டிச.11 – கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல உள்ளது நடிகர் விஜய்யின் பேச்சு என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் நடுவூரில், ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, 170.22 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. அதற்கான, கட்டுமான பணிகளை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டினர். பிறகு, அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது, கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல உள்ளது. அவர் தேர்தலில் நிற்கட்டும், முதலில், சில சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுசசேரி போகட்டும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான், இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
