புகையிலை பொரூட்கள் விற்ற இரு பெண்கள் கைது

X
Komarapalayam King 24x7 |12 Dec 2025 8:55 PM ISTகுமாரபாளையம் அருகே புகையிலை பொரூட்கள் விற்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரைந்து பணி மேற்கொண்டனர். வட்டமலை பகுதியில் உள்ள இரண்டு பெட்டிக்கடைகளில் லலிதா, 55, முத்துலட்சுமி, 68, ஆகிய இருவர் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
