நீதிமன்றத்தில் இ-பைலிங் செய்யும் உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
Srivilliputhur King 24x7 |15 Dec 2025 4:00 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இ-பைலிங் செய்யும் உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இ-பைலிங் செய்யும் உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இ-பைலிங் செய்யும் உத்தரவு நகலை எரித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தின் முன் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை முழுமையாக ரத்து செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையிலும் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை சுதந்திரமாக செய்யும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக சட்டம் இயற்ற வலியுறுத்தியும் வழக்கறிஞர்களின் சேம நலநிதியில் தற்போது உள்ள ரூபாய் 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இ-பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை பதிவு செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவு நகலை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராசையா, செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


