டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி தந்தை, மகள் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |15 Dec 2025 7:00 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி தந்தை, மகள் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் கள்ளிபாளையம் பகுதியில் வசிப்பவர் கதிர்வேல், 42. விவசாயி. டிச. 8ல், இரவு 07:45 மணியளவில் இவரும், இவரது மகள் ஸ்ருதி, 15, ஆகிய இருவரும், டி.வி.எஸ். ஹெவி டூட்டி வாகனத்தில், பல்லக்காபாளையம் வாரச் சந்தைக்கு சென்று, காய்கறி வாங்கிக்கொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை, வளையக்காரனூர் சர்வீஸ் சாலையில் வந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிரில் வந்த சரக்கு வாகனம் இவர்கள் வந்த வாகனம் மீது மோத, தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஒட்டுனர் திருப்பூர், தினேஷ்குமார், 29, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
