மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பள்ளி மாணவர்கள்
Perambalur King 24x7 |16 Dec 2025 11:06 PM ISTஇலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி போதை ஒழிப்பு மன்றம் சார்பில் 16-12-2025 இன்று மனித சங்கிலி விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம்
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி போதை ஒழிப்பு மன்றம் சார்பில் 16-12-2025 இன்று மனித சங்கிலி விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் பள்ளி அருகிலும், அம்பேத்கார் சிலை முன்பாகவும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், எனவும் போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று கோசமிட்டனர். பள்ளி ஆசிரியர்கள் செல்வராணி சிலம்பரசி அருணா, கார்த்திகா பிரபாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



