இ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...

X
Rasipuram King 24x7 |17 Dec 2025 6:44 PM ISTஇ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...
இ ஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வாயில் கருப்புபேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர்.கே.டி. தங்கதுரை தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தின் முன்பு 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்காமலும், உரிய தொழில்நுட்பத்துடன் கூடிய நீதிமன்ற ஊழியர்களை நியமனம் செய்யாமலும், நடைமுறையை கட்டாயப்படுத்த கூடாது எனவும், இ ஃபைலிங் காண கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை மேனுவல் பில்லிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி நீதிமன்றம் வளாகம் முன்பாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் வாசுதேவன், கணபதி, செல்வகுமார், செல்லமுத்து,குமார், கார்த்திகேயன், ராதா, கீதாலட்சுமி, ஹரிஹரசுதன், வேலுச்சாமி, அருள்குமார், சௌந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Next Story
