இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் பாடுகாயம்

இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் பாடுகாயம்
X
லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணராயபுரம் தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45)இவர் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார் இவர் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் வீரமணி என்பவரை தனது டுவீலரில் அழைத்துக்கொண்டு,கடந்த,14ம் தேதி மதியம், 2:00 மணிக்கு வரகூர் அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே அதே ஊரை சேர்ந்த நாகரத்தினம்( 29)என்பவர், டூவீலரில் அதிவேகமாக வந்து, இவர்களின் டூவீலர் மீது மோதினார் இதில் சரவணன், வீரமணி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தினர். அங்கிருந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புகார்படி, நாகரத்தினம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story