டூவீலர் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கூலி பெண் தொழிலாளி படுகாயம்

டூவீலர் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கூலி பெண் தொழிலாளி படுகாயம்
X
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கூலி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ரெட்டிபட்டி பகுதியில் வசிப்பவர் பாப்பாள், 54. இவர் டிச.14, மாலை 06:00 மணியளவில், கூலி வேலை முடிந்து, தனது வீட்டிற்கு செல்ல, டி.வி.எஸ். 50 வாகனத்தில், சேலம், கோவை புறவழிச்சாலை, ரங்கனூர் பிரிவு பகுதியில் தனது வாகனத்தை திருப்பினார். அப்போது, சொகுசு பஸ் ஒன்று, இவர் வந்த வாகனம் மீது மோத, பாப்பாள் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கொடுத்த புகாரின் படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொகுசு பஸ் ஓட்டுனர் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் வசிக்கும் சரவணன், 47, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story