ராசிபுரம் ஸ்ரீ வைரமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்...

ராசிபுரம் ஸ்ரீ வைரமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்...
X
ராசிபுரம் ஸ்ரீ வைரமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்...
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம் ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள் அனுமன். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள் புரியும் அனுமானை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியவும் வந்து சேரும். மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா ராசிபுரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைரமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அதிக அளவில் ஸ்ரீ வைரமலை ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் யாகங்கள் நடத்தப்பட்டு பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் மற்றும் வடமாலை உடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வகையான கலவை சாதங்கள், இனிப்புகள், வடை போன்றவை அன்னதானம் செய்யப்பட்டது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வைர மலை ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்...
Next Story