ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி

X
Ranipet King 24x7 |22 Dec 2025 8:50 PM ISTஇதில் சிறப்பு விருந்தினராக பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசியதாவது
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி அரக்கோணம் பார் அசோசியேஷன் தலைவர் வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை அசோசியேஷன் தலைவர் டாக்டர் சுரேந்திரன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசியதாவது, பார் கவுன்சி தலைவருக்கு மீண்டும் நான் போட்டியிடுகிறேன் ஆகவே எனக்கு ஆதரவளித்து தருவதோடு புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள ஈ ஃபைலிங் தொடர்பாக முறைப்படித்த நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். அதேபோல் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதி 10 லட்சத்தில் இருந்து 25 வரை வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆற்காடு பார் அசோசியேஷன் தலைவர் நந்தகுமார், சோளிங்கர் பார் அசோசியேஷன் சுப்பிரமணி, வாலாஜா பார் அசோசியேஷன் நேதாஜி, அரக்கோணம் அட்வகேட் அசோசியேசன் தலைவர் தனசேகரன் நன்றியுரையாக வழக்கறிஞர் பிரசன்னாகுமார், ஜெயகுமார் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
