ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோக முன்னோட்டம்..

ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோக முன்னோட்டம்..
X
ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோக முன்னோட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் வேலம்பாளையம் பகுதிக்கு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கும் பணிக்கான முன்னோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். வேலம்பாளையம் பகுதிக்கு தொப்பப்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், குடிநீர் சரிவர வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர். இதனையடுத்து இதனை விரைந்து சரிசெய்வதாக அமைச்சர், எம்பி., ஆகியோர் பொதுமக்களுக்கு ஏற்கனவே உறுதியளித்திருந்தனர். இதனையடுத்து, இதற்கான குடிநீர் வினியோக முன்னோட்டம் நடைபெற்றது. இதனை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித்தருவதாக தெரிவித்தனர். இதில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story