கண் நோய் தாக்கிய செம்மறியாடு ஈன்ற இரண்டு குட்டிகள்

X
Komarapalayam King 24x7 |24 Dec 2025 3:43 PM ISTகுமாரபாளையத்தில் கண் நோய் தாக்கிய செம்மறியாட்டிற்கு இரண்டு குட்டிகள் பிறந்தது.
குமாரபாளையம் அருகே உள்ளது தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் கிராமம். இங்கு ஏராளமான விவசாயிகள் ஆடுகள் வளர்த்து வாழ்ந்து வருகின்றனர். சமீப நாட்களாக ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் மூடும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் வசம் சொல்லியதால், இரு நாட்கள் முன்பு வீரப்பம்பாளையம் பகுதியில் மூகாம் அமைத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஊசி போட்டனர். இரண்டாம் கட்டமாக நேற்று மீண்டும் கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து கண் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஊசி போட்டனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் வளர்த்து வந்த செம்மறி ஆட்டிற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: வழக்கமாக வெள்ளாட்டிற்குதான் அவ்வப்போது இரண்டு, மூன்று குட்டிகள் பிறப்பது வழக்கம். செம்மறி ஆட்டிற்கு வழக்கமாக ஒரு குட்டி தான் பிறக்கும். நூற்றில் ஒரு செம்மறி ஆட்டிற்குதான் இரண்டு குட்டிகள் பிறக்கும். இவ்வாறு அவர் கூறினர். தற்போது இரண்டு குட்டி ஈன்ற செம்மறி ஆடு, கண் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
