ராசிபுரத்தில் அண்ணா தொழிற்சங்கம் ராசி ஆட்டோ ஓட்டுநர்கள் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி...

X
Rasipuram King 24x7 |24 Dec 2025 8:27 PM ISTராசிபுரத்தில் அண்ணா தொழிற்சங்கம் ராசி ஆட்டோ ஓட்டுநர்கள் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் எஸ்.ஆர். சீனிவாசன், அவர்கள் தலைமையில் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர். இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சிட்டி என்கின்ற வரதராஜன், ராசி ஆட்டோ தொழிற் சங்க ஓட்டுநர்கள் எம்.ஜி. ஆர். பார்த்திபன், கன்னையா செல்வம், ஆர். சி.எம். எஸ். சத்திய நாராயணன், அதிமுக நகர துணைச் செயலாளர் வாசுதேவன், சண்முகம், முருகேசன், எஸ். ஆர். மணிகண்டன், முத்துக்காளி பட்டி தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
Next Story
