கடவூர் அருகே தனியார் செல்போன் டவரில் கேபிள் திருடிய மூன்று பேர் கைது

X
Krishnarayapuram King 24x7 |25 Dec 2025 7:10 PM ISTபாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
கரூர் மாவட்டம்,கடவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் டவரில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 60 மீட்டர் நீளமுள்ள உயர்தர கேபிள் ஒயர்களை திருடி சென்று விட்டதாக செல்போன் டவர் கண்காணிப்பு பணியாளர் கடவூர் தாலுகா டி . இடையாபட்டியை சேர்ந்த ஏகாம்பரமூர்த்தி( 31) என்பவர் பாலவிடுதி போலீசில் புகார் அளித்துள்ளார் .இந்தப் புகாரைத் தொடர்ந்து தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (31 ),அதே பகுதியில் சேர்ந்த மதன் (30),திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (38 ) என மூன்று பேரையும் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
Next Story
