நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி: மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி நேரில் சென்று வாழ்த்து...

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி: மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி நேரில் சென்று வாழ்த்து...
X
நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி: மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி நேரில் சென்று வாழ்த்து...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனுார் 7வது கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 59. விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது விஜயலட்சுமி, மனைவி 49. இவர்களுக்கு நவீன் குமார், 26, என்ற மகன், கமலி, 22,என்ற மகள் உள்ளனர். கமலி பள்ளி படிப்பை தனியார் பள்ளியில் முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த சில மாதங்க ளாக, தனியார் பயிற்சி நிறுவனத்தில், இவர் வங்கி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலத்தில் பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பாரத் ஸ்டேட் வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார். இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, அத்தனூர் பேரூராட்சித் துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story