கடலூர்: மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை

கடலூர்: மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை
X
கடலூரில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
Next Story