ராசிபுரத்தில் ஒவியம், கையெழுத்துப் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |13 Jan 2026 8:44 PM ISTராசிபுரத்தில் ஒவியம், கையெழுத்துப் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குருக்கப்புரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஓவியம்,கையெழுத்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி கிளப், ருருக்கப்புரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, ப்ரைம் ஆர்ட் பள்ளி இணைந்து நடத்திய இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக சைக்கிள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியின் தலைவர் என்.வி.நாகேந்திரன், பள்ளியின் முதல்வர் ஜி.சங்கீதா ,பிரைம் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் என்.மோகன்ராஜ் , செயலாளர் எஸ்.தேவேந்திரன், ராஜ் ஹோஸ் கம்போர்ட்ஸ் ஜெ.ராஜேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசளித்தனர்
Next Story
