வாலாஜா நகர அதிமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது...

X
Ranipet King 24x7 |16 Jan 2026 9:37 AM ISTஇந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் டபிள்யூ ஜி. மோகன் தலைமை தாங்கினார். எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி. ஏழுமலை மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் டபிள்யூ.எஸ்.வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வாலாஜா நகர அதிமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது... ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர அதிமுக அலுவலகத்தில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு நகர நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் டபிள்யூ ஜி. மோகன் தலைமை தாங்கினார். எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி. ஏழுமலை மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் டபிள்யூ.எஸ்.வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் டபிள்யூ.ஜி. முரளி,மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் BLA-2 மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
