மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தை பொங்கல் சிறப்பு பூஜை அலங்காரம் பக்தர்கள் தரிசனம்...

X
Rasipuram King 24x7 |16 Jan 2026 7:32 PM ISTமெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தை பொங்கல் சிறப்பு பூஜை அலங்காரம் பக்தர்கள் தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டாலா கணவாய் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் தை மாதம் பிறப்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம்,இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன..
Next Story
