புதுச்சத்திரத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

X
Namakkal King 24x7 |17 Jan 2026 10:07 PM ISTஅதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதியில் அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர். பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டது,தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
