ராணிப்பேட்டை மாவட்டம் குடியரசு தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ராணிப்பேட்டை மாவட்டம் குடியரசு தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
X
2026-ஆம் ஆண்டிற்கான கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து,அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகின்ற 26.01.2026 குடியரசு தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள்
குடியரசு தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ராணிப்பேட்டை மாவட்டம் 2026-ஆம் ஆண்டிற்கான கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகின்ற 26.01.2026 குடியரசு தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இக்கிராம சபைக் கூட்டத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு செலவு திட்டம், தொழிலாளர் வரவு செலவு திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி தூய்மை பாரத இயக்க ஊரகம் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத்திட்டம், இதர பொருட்கள் மேற்படி கிராம சபைக் கூட்டங்களில் வட்டாட்சியர்களை பார்வையாளர்களாக கலந்து கொள்ளவும் மற்றும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story