நெய்தலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
Kulithalai King 24x7 |22 Jan 2026 7:42 PM ISTமுன்னாள் தோகைமலை யூனியன் சேர்மன் சுகந்தி சசிக்குமார் முன்னிலை வகித்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் 17 வகையான சிறப்பு மருத்துவர் சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை இயக்குனர் சுப்பிரமணியன், முன்னாள் தோகைமலை யூனியன் சேர்மன் சுகந்தி சசிகுமார், மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




