ராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்..

X
Rasipuram King 24x7 |25 Jan 2026 8:39 PM ISTராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டல பொறுப்பாளர் கழகத் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் C. சண்முகவேல் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் சார்பாக அமமுக மாவட்ட கழக அலுவலகம் முன்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தி கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் மொழிப்போர் தியாகிகளின் வீர வரலாற்றை எடுத்துக் கூறி மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் பி.அன்பு செழியன், மாவட்ட கழக இணைச் செயலாளர் இ.கே.திலகம், மாவட்ட கழக துணை செயலாளர் பி. அம்பிகா, பொதுக்குழு உறுப்பினர் டி. உதயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்த ராசிபுரம் நகரக் கழக செயலாளர்கள் கிழக்கு ஆர்.டி.தர்மராஜ், மேற்கு பூபதி, செய்திருந்தனர். மேலும் ஒன்றிய கழக செயலாளர்கள் ராசிபுரம் கிழக்கு வி.ராஜா, சேந்தமங்கலம் பி.முருகேசன், நாமகிரிப்பேட்டை கிழக்கு டி.சதீஷ்குமார், கொல்லிமலை கே.சி.ரவிச்சந்திரன், எருமப்பட்டி கிழக்கு சரவணன் , வெண்ணந்தூர் கிழக்கு சீனிவாசன், ராசிபுரம் மேற்கு எம்.கே.பாலசுப் பிரமணியம் , நாமகிரிப்பேட்டை மேற்கு சுப்பராயன், கண்ணன் என்கிற சீனிவாசன் வெண்ணந்தூர், மேற்கு ஜெகநாதன் எருமப்பட்டி மேற்கு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர் பெரியசாமி, நாமகிரிப்பேட்டை வெங்கடாசலம், புதுப்பட்டி ரஞ்சித் குமார், பட்டணம் சேகர், வெண்ணந்தூர் தாமோதரன் , அத்தனூர் மகேந்திரன், காளப்பநாயக்கன்பட்டி. சுரேஷ் , சேந்தமங்கலம் ராஜா, பில்லா நல்லூர் சங்கமேஸ்வரன், EX பில்லா நல்லூர் அசோக் குமார், எருமப்பட்டி மற்றும் மாவட்ட சார்பு அணியினுடைய மாவட்ட செயலாளர் மேகநாதன், அம்மா பேரவை பாலு, மீனவரணி தினேஷ் குமார், தொழில் நுட்பத்துறை மகேஷ், தனிஷ் , மாணவர் அணி கோடீஸ்வரன், அம்மா தொழிற்சங்கம் ரமேஷ்குமார், வழக்கறிஞர் அணி கண்ணன், ஓட்டுனர் அணி கந்தசாமி, வெளிநாட்டு வாழும் அணி ஈஸ்வரன், சுற்றுலா சூழல் அணி கோகிலா, இளம்பெண்கள் பாசறை துரைசாமி, அம்மா பேரவை செல்வராணி, மகளிர் அணி குட்டி என்கிற நட்ராஜ், சிவனேசன், கொல்லிமலை வார்டு கழக செயலாளர்கள் ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், மற்றும் மகளிர் அணி, இளைஞர்கள் அணி, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story
