கள்ளக்குறிச்சி: சின்னசேலம் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தநபரின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய ஒன்றிய சேர்மன்...

X
Rishivandiyam King 24x7 |2 Feb 2026 9:07 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அனுமனந்தல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆறுமுகம் மகன் புகழேந்தி (வயது 27) இவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் நிவாரண நிதியாக வழங்கிய சின்னசேலம் ஒன்றிய சேர்மன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அனுமனந்தல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆறுமுகம் மகன் புகழேந்தி (வயது 27) இவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி ரூபாய் 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கி புகழேந்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கனகராஜ், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் வினோத் பாபு, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story
