சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தின் மூலம் செப்டம்பர் மாதம் 09.09.2025 முதல்19.09.2025 வரை 10 நாள் பயிற்

X
சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டேட் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தின் மூலம் செப்டம்பர் மாதம் 09.09.2025 முதல்19.09.2025 வரை 10 நாள் பயிற்சியாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில் முனைவோர் மற்றும் அதற்கான அரசு திட்டங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது.
அரியலூர், ஆக.20- அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தின் மூலம் செப்டம்பர் மாதம் 09.09.2025 முதல்19.09.2025 வரை 10 நாள் பயிற்சியாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில் முனைவோர் மற்றும் அதற்கான அரசு திட்டங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள தகுதி : 18 வயது முதல் 50 வயது வரை . எனவே இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதின் அடிப்படையில் முதல் 30 நபர்கள் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்ச்சி பெற்ற பிறகு தங்களது தகுதிக்கேற்ப மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இப்படிக்கு முனைவர்.கோ. அழகு கண்ணன் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், கிரீடு வேளாண் அறிவியல் மையம், சோழமாதேவி. தொடர்புக்கு : 9655926547,6374206977 குறிப்பு : பயிற்சியின் போது மதிய உணவு மற்றும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
Next Story

