சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ரூ.1¼ கோடி மோசடி

சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ரூ.1¼ கோடி மோசடி

கோப்பு படம் 

சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ரூ.1¼ கோடி மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ராஜீவ்காந்தி ரோடு அண்ணா பூங்கா பகுதியில் பிரபல ஓட்டலை நடத்தி வருபவர் சரவணன். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில், எங்களது ஓட்டலில் சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேலாளராக பணியாற்றினார்.

இந்த நிலையில் ஓட்டலின் வரவு, செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது ‘பில்’கள் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 214 மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடியில் ஓட்டல் மேலாளராக பணியாற்றியவர் மீது சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து ஓட்டல் மேலாளராக பணியாற்றி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story