உளுந்துார்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்துார்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விற்பனை
உளுந்துார்பேட்டையில் ஆடி 18 தினத்தையொட்டி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின. வரும் சனிக்கிழமை ஆடி 18 தினத்தையொட்டி உளுந்துார்பேட்டையில் புதன்கிழமை தோறும் நடக்கும் ஆடு விற்பனை வார சந்தையில் நேற்று ஆடுகள் அதிகயளவில் விற்பனைக்கு வந்தன. ஆடு ஒன்று 2,500 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
Next Story