பிளஸ் 1 படித்த மாணவி மாயம் போலீசார் விசாரணை

பிளஸ் 1 படித்த மாணவி மாயம் போலீசார் விசாரணை
விசாரணை
வாணாபுரம் அடுத்த சின்னகொள்ளியூர் தக்காவைச் சேர்ந்தவர் சலீம் மகள் தாரா, 18; பிளஸ் 1 வரை படித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பகண்டைகூட்ரோட்டில் உள்ள சித்தி நஜீமாவின் வீட்டிற்கு சென்றவர் அங்கேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மதியம் கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த அவரது தாய் சாய்னா அளித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story