லோன், வேலை வாங்கி தருவதாக 1கோடி மோசடி வாலிபர் கைது

லோன், வேலை வாங்கி தருவதாக 1கோடி மோசடி வாலிபர் கைது
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (47). இவர் முஞ்சிறை  பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த ஷிபு (38) என்பவர் இவருக்கு அறிமுகம் ஆகி ஆகியுள்ளார். ஷிபு ஒரு தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாகவும் பல கோடி ரூபாய்களுக்கு லோன் வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.       கிருஷ்ணனுக்கு ஒரு தனியார் பள்ளிக்கூடத்தை வாங்க திட்டமிருந்துள்ளது. இதற்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. அவர் ஷிபுவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஷிபு லோன் வாங்கி கொடுப்பதாக  ஒப்புக்கொண்டுள்ளார். அதற்காக கிருஷ்ணன் ஆறு லட்சத்து 78 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.       பின்னர் ஷிபு கிருஷ்ணனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். போன் செய்தாலும் எடுப்பதில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த கிருஷ்ணன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தினர்.       இதில் ஷிபு லோன் வாங்கி தருவதாகவும் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஷிபு வை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story