பல்லடம் அருகே நகை வியாபாரியின் காரை வழிமறித்து போலீஸ் எனக்கூறி ரூபாய் 1 கோடியே 10 லட்சம் கொள்ளை

பல்லடம் அருகே நகை வியாபாரியின் காரை வழிமறித்து போலீஸ் எனக்கூறி ரூபாய் 1 கோடியே 10 லட்சம் கொள்ளை 5 பேர் கைது - முக்கிய குற்றவாளிகள் மேலும் மூன்று பேருக்கு வலை
ஒரு மாதமாக நகை வியாபாரியை பின் தொடர்ந்து ஸ்கெட்ச் போட்டு சம்ப்வத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது - முக்கிய குற்றவாளிகள் மேலும் மூன்று பேருக்கு வலை. கரூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார்.நகை கடைக்கு தேவையான நகைகளை அடிக்கடி கோயமுத்தூர் சென்று வருவது வழக்கம்.தனது கடைக்கு நகைகள் வாங்க செல்லும் போது அருகில் இருக்கும் கடையினருக்கும் நகைகள் வாங்கி வருவார்.கடந்த புதன் கிழமை மாலை இவரது ஓட்டுநர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தார். காங்கேயத்தை அடுத்த சம்பந்தம்பாளையம் பிரிவு அருகே வரும்போது வெங்கடேஷின் வாகனத்தின் பின்னால் காரில் வந்த நான்கு நபர்கள் வாகனத்தை மறித்து தாங்கள் போலீஸ் எனக் கூறி வெங்கடேஷ் வந்த காரில் மூன்று நபர்கள் ஏறி உள்ளனர்.ஓட்டுனர் இருக்கையில் ஏறிய நபர் வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவிநாசிபாளையம் to தாராபுரம் ரோட்டில் செலுத்தியுள்ளார். வேங்கிபாளையம் வாய்க்கால் அருகே வரும்போது வாகனத்தை நிறுத்தி வெங்கடேஷிடம் இரண்டு பேக்கில் இருந்த ரூ.1 கோடியே 10 லட்சம் பணத்தையும் அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்களையும் பறித்துக் கொண்டு இது குறித்து போலீசில் புகார் அளித்தால் வெங்கடேஷின் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு மற்றொரு காரில் ஏறி மூன்று நபர்களும் சென்று விட்டனர்.இதனால் பயந்து போன வெங்கடேஷ் டிரைவர் ஜோதியுடன் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.பணத்தை கொள்ளையடித்து சென்றது குறித்தும் அவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையும் தனது உறவினருடன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என உறவினர்கள் ஒன்றும் ஆகாது என உறவினர்கள் கூறியதை தொடர்ந்து நேற்று காலை காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலில் காங்கேயம்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது சம்பவம் நடந்த இடம் அவினாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என தெரியவந்தது.அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர்வின் பேரில் அவிநாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் தனிப்படையினர் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் ஓட்டுநர் ஜோதிவேல் என்பவருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஜோதியின் நண்பரான கரூரில் வக்கீல் அலுவலகத்தில் பணி புரியும் தியாகராஜன் என்பவர் கடனை அடைக்க பணம் கேட்டுள்ளார்.தனக்கும் அதிக அளவில் கடன் உள்ளதால் பணம் தேவை படுவதாக கூறிய ஜோதி தான் வெங்கடேஷ் என்பவருக்கு ஆக்டிங் டிரைவராக செல்வதும் அவர் அடிக்கடி நகை வாங்க கோவை செல்வதாகவும்,அப்படி செல்லும் போது தன்னை அழைப்பார் எனவும் கூறியுள்ளார்.மேலும் நாங்கள் இருவர் மட்டுமே நகை வாங்க செல்வோம்.அப்படி செல்லும் போது பணத்தை கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.இதனை கேட்ட தியாகராஜன் நாம் மட்டும் இதனை செய்ய முடியாது,எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவர் மூலம் செய்யலாம் என கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து தியாகராஜன் பணி புரியும் வக்கீல் அலுவலகத்திற்கு வரும் ஜாகீர் உசேன் என்பவரிடம் கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து ஒரு மாத காலமாக சுமார் 4 முறை ஜாகீர் உசேன் தனது கூட்டாளிகளுடன் வெங்கடேஷ் கோவைக்கு செல்லும் போதெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.எங்கெல்லாம் செல்கிறார்,எங்கு நகை வாங்குகிறார் என கரூரில் அவரது வீட்டில் இருந்து கோவை செல்லும் வரை பின் தொடர்ந்துள்ளனர்.அதன் பிறகே கடந்த புதன் கிழமை அவர் ஒரு கோடி ரூபாயுடன் வருவதாக ஓட்டுனர் ஜோதி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது விசாரணையில் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து ஜோதி கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன், குளித்தலை பகுதியை சேர்ந்த விக்னேஷ், ஸ்ரீகாந்த், மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் ஜாகீர் உசேன் உட்பட மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story