ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த, குருப்-1 -2025 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி

X
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உ ள்ள முன்னணி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப்-1 – 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு (Main Examination) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப்-1 – 2025 முதல் நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதிக் கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

