கற்பக விநாயக மருத்துவக் கல்லூரியில் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா
Maduranthakam King 24x7 |29 Aug 2024 1:52 PM GMT
கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி பத்தாவது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம்,படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் பத்தாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி சரோஜா ரகுபதி கலையரங்கில் நேற்று காலைநடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரிய இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். பொறியியல் கல்லூரி இயக்குனர் மீனாட்சியண்ணாமலை முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுபாளா சுனில் விஷ்வாஷ் ராவ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற 120 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கண்ணகி டாக்டர் சத்திய நாராயணன் உள்ளிட்ட துறை தலைவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story