கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.

கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.
X
மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.
விழுப்புரம் மாவட்டம்,கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.கண்டங்கலம் அடுத்த பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை நேற்று முன்தினம் சங்கராபரணி ஆற்றங்கரையில் மேய்த்தனர்.பிற்பகல் 3;00 மணியளவில் மழை பெய்ததால் ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மரத்தடியில் ஒதுங்கி நின்றனர்.ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலத்தின் வழியே சென்ற மின்சார் தொடரில் ஒரு மின்கம்பி அறுந்து விழுந்தது.இதில், மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான 8 ஆடுகள், குணசேகரன் மற்றும் அஞ்சலை ஆகியோருக்குச் சொந்தமான தலா 1 ஆடு என மொத்தம் 10 ஆடுகள் இறந்தன.வி.ஏ.ஓ., காஞ்சனா மற்றும் மின்துறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைத்தனர்.
Next Story