சேலத்தில் 10½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

X
சேலம் அம்மாபேட்டையை அடுத்துள்ள குமரகிரி பைபாஸ் பகுதியில் சிலர் வாகனங்களில் கஞ்சா கடத்தி செல்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்மாபேட்டையை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பதும், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 10½ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி அதனை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனால் அவருக்கு கஞ்சா கொடுத்தவர்கள் யார்? சேலத்தில் யாருக்கு விற்பனை செய்ய முயன்றார்? என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

