இறந்தவர் குடும்பத்துக்கு அரசு நிதி ரூ.10 லட்சம்

X
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஜான்சன். இவர் கடந்த 01.06.2025 அன்று தடுப்பணையில் தவறி விழுந்த 2 மாணவர்களின் உயிரையும் காப்பாற்றிய நிலையில், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் நிதியுதவியினை அறிவிக்கப்பட்டது. ரூ.10 இலட்சத்துக்கான காசோலையினை நேற்று 5-ம் தேதி பீட்டர் ஜாண்சன் மனைவியிடம் வழங்கப்பட்டது. கலெக்டர் அழகு மீனா தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிதியுதவியை வழங்கினர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

