மதுராந்தகம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 10 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி

மதுராந்தகம் அருகே  மேய்ச்சலுக்குச் சென்ற 10 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி
X
மதுராந்தகம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 10 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி
மதுராந்தகம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 10 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் பெரும்பேர்கண்டிகை மற்றும் சிறுபேர்பாண்டி கிராமத்தை சேர்ந்த மாடுகள் மேச்சலுக்கு வழக்கம் போல் சென்றது.அப்போது நேற்று இரவு காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பம் மரங்கள் சாய்ந்து மின் ஒயர்கள் அறுந்து விழுந்து கிடந்தது. அப்போது பெரும்பேர்கண்டிகை பகுதி சேர்ந்த மாடுகளும் மற்றும் சிறுபேர்பாண்டி மாடுகள் என 50-க்கும் மேற்பட்ட மாடுகள் மேலச்சலுக்கு சென்றன. அப்பொழுது அருந்து கிடந்த மின் ஒயர் மின்சாரம் தாக்கி பெரும்பேர்கண்டிகை ஒரு கறவை மாடும் சிறுபேர்பாண்டி பகுதியை சேர்ந்த 10 பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி பலியாகின. சிறுபேர்பாண்டி பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவருடைய ஒரே குடும்பத்தில் உயர் ரக கறவை பசு மாடுகள் 6 இறந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வருவாய்த் துறையினர் கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து ஏற்படுத்திய பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story