சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை:
X
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 17 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன் (25/2025) என்பவரை புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி முருகன்  இன்று (13.08.2025) குற்றவாளி மாயகிருஷ்ணனுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 3,000 அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
Next Story