பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில்வரும் 16ம் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

X
Tiruchengode King 24x7 |11 Oct 2025 8:56 PM ISTதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 1 திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில்நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என முடிவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 16.10.2025 (வியாழன்) நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரத் தலைநகரிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்க முடிவு. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 11.10.2025 (சனி) அன்று முற்பகல் 11 மணிக்கு திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் சி.காரத்திக் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கு.இராஜேஸ்வரி , க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் செயலறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் சு.பிரபு நிதிநிலையறிக்கை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இயக்க உரை ஆற்றினார். நிறைவாக நாமக்கல் ஒன்றியச் செயலாளர் மு.சசிக்குமார் நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல் , ஒன்றியப் பொறுப்பாளர்கள் க.சேகர் (பரமத்தி) பி.கண்ணன் (பள்ளிபாளையம் )நா.ஜீவாஜாய் (நாமக்கல்) வி.தாமரைச்செல்வன் , ப.கோகிலா , பெ.கௌதமி (திருச்செங்கோடு) சு.செல்வகுமார் (எலச்சிபாளையம் ) க.சண்முகசுந்தரம், பெ.செந்தில்குமார் (மல்லசமுத்திரம்) உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தேர்தல் கால வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும். 2..மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடல் வேண்டும் 3..பேரறிஞர் அண்ணா அவர்களின் காலம் முதல் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி தொடர்ந்து வழங்கிடல் வேண்டும். 4..ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பினை பறித்து மாநில பணிமூப்பினை திணிக்கும் அரசாணை எண்:243 நாள் : 23.12.2023 முற்றாக இரத்து செய்யப்படுதல் வேண்டும். 5.கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வினை கைவிட்டு பணியாற்றும் ஆசிரியர்களை பாதுகாத்திடவும் , பணிமூப்பின் படி பதவி உயர்வு வழங்கிடவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 6 தமிழ்நாட்டு ஆசிரியர் -அரசு ஊழியர்களின் வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள நவம்பர் 18 ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட மூன்று கட்டத்தொடர் போராட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவது என்று இக்கூட்டம் முடிவாற்றியது. 7.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 16.10.2025 (வியாழன்) அன்று கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிப் பணியாற்றுவது என்றும், மாவட்டத்தின் அனைத்து வட்டாரத் தலைநகரிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது என்றும் இக்கூட்டம் முடிவாற்றியது. 8.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம் -2017 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் ஆசிரியர் கல்வித்தகுதி விதிகளில் பொருத்தமான திருத்தங்களை கொண்டுவந்து கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக நாடெங்கும் பாதிக்கப்பட்டுள்ள 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமாய் மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 9.எருமப்பட்டி ஒன்றியம் கொடிக்கால்புதூர் மற்றும் காவக்காரண்பட்டி தொடக்கப்பள்ளிகளுக்கு. வெளிப்படையான கலந்தாய்வு முறையின்றி சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாறுதல்களை இரத்து செய்து தவறிழைத்தவர்களின்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 10.ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் நடத்திடவும், குறுவளமைய அளவிலான மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்திடவும் திருச்செங்கோடு வட்டார வளமையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு நிதிகள் செலவினம் செய்யப்பட்டது குறித்து ஆய்வும் -விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும். 11.குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்றுள்ள/வெற்றி பெற்றுள்ள மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள்,பதக்கங்கள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும்.என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story
