கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மு.மாணவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் பள்ளி 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை

கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மு.மாணவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் பள்ளி 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை
X
கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மு.மாணவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் பள்ளி 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், மார்ச்21- கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மு.மாணவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் பள்ளி 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-ஆம் ஆண்டு ஆண்டு விழா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர் முக்கியஸ்தர்களான கொளஞ்சி, பலகுரல் கண்ணன், ஆகியோர் முன்னிலையில் வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக திருக்குறள் ஞான மன்றம் பன்னீர்செல்வம், அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசை வழங்கப்பட்டது. ஊர் மக்கள் சார்பாக பள்ளிக்கு சீர்வரிசையாக 2 லட்சம் மதிப்பிலான டிவி, ஸ்பீக்கர், பேன், ரேக், செல்ப் உள்ளிட்ட தளவாட பொருட்களை  வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கழுவந்தோண்டி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கோரிக்கை வைத்து பேசினார்.மேலும் புரவலர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நன்கொடை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன்படி ஊர் பொதுமக்கள் சார்பாக 500 முதல் 1000 வரை என நிதி வழங்கப்பட்டது.இதில் நடுநிலைபள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நன்கொடையாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  செங்குந்தபுரம் தலைமை ஆசிரியர் வேலுமணி ,ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என 500.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லதா நன்றி கூறினார்.
Next Story